ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஊற்றங்கரையில் சிறப்புடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்




                    பல்வேறு மருத்துவ தகவல்களை திரட்டி தந்த
ஊற்றங்கரையில் சிறப்புடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டத்தின்
           இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
பிப் 13 ,
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டத்தில் நடைபெற்றது .இந் நிகழ்ச்சிக்கு
இந்திய தேசிய காங்கிரெஸ்பொறுப்பாளரும்  விடுதலை வாசகர் வட்டதின் துணை செயலாளருமான திரு.சு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையாற்றினார் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும்  மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவருமான எம்.ஆர்.இராஜேந்திரன் தலைமைதாங்கினார்.விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும்
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளருமான
திரு.தணிகை .ஜி .கருணாநிதி,
ஊற்றங்கரை -அரூர் மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.கே.மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசித்தார்

42 வருட விடுதலை முகவருக்கு பாராட்டு

42 வருடமாக பத்திரிக்கை துறையிலிலும் விடுதலை முகவராகவும் செயல்பட்டு வரும் திரு .V .R .ரகோத்தமன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .விடுதலை வாசகர் வட்டதின் அமைப்பாளரும் திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளருமான  பழ.வெங்கடாசலம் அவர்கள் பாராட்டுரையாற்றினார் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும்  மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவருமான எம்.ஆர்.இராஜேந்திரன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார் இறுதியாக திரு .ரகோத்தமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்


பெரியார் மருத்துவமனைக்கு மருந்துகள் அன்பளிப்பு

பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பெரியார் மணியம்மை இலவச மருத்த்துவ மனைக்கு ஊற்றங்கரை திராவிடர் கழகம் கடந்த ஓராண்டாக பல்வேறு இடங்களில் இருந்து சாம்பிள் மருந்துகளை சேகரித்து அனுப்பி வருகிறது .அதன் தொடர்ச்சியாக சிங்காரப்பேட்டை தாமரை மெடிகல்ஸ் உரிமையாளர் திரு.செந்தாமரைசெல்வன் அளித்த சாம்பிள் மருத்துகளை ஊற்றங்கரை -அரூர் மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.கே.மோகன்குமார் விடுதலை வாசகர் வட்டதின் அமைப்பாளரும் திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளருமான  பழ.வெங்கடாசலம் அவர்களிடம் அளித்தார்

பேறிஞர் அண்ணா படத்திறப்பு

பிப்ரவரி மாதம் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அண்ணா படம் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் மானமிகு.அண்ணா.சரவணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இடையே இருந்த உறவையும் கொள்கை உணர்வையும் எடுத்துரைத்து மிக சிறப்பான உரையாற்றினார்

மருத்துவர் உரை 


மருத்துவர் சிவசுப்ரமணியம் குறித்த அறிமுக உரையை திரினாமுல் காங்கிரெஸ் மாவட்ட தலைவர் க .அசோக் உரையாற்றினார்  இருதய நலம் குறித்து உரையாற்ற வந்த பிரபல இருதய நிபுணர் மருத்துவர் பெ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் இணை செயலாளர் இர.திருநாவுக்கரசு அவர்களும் ,புரவலர் அழகுமணி வெங்கடாசலம் அவர்களும் நினைவு பரிசு வழங்கினர்.மருத்துவர் பெ.சிவசுப்ரமணியம் அவர்கள் தனது உரையில் இதய நலம் குறித்தும் ,உடற் பயிற்சி ,சைக்கிள் ஒட்டுவதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார் பின்னர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இறுதியாக வாசகர் வட்ட செயற் குழு உறுப்பினர் க.துரை நன்றி கூறினார்

நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் எழுதிய ''மாரடைப்பு வரு முன் காக்க இதோ ஓர் எளிய வழி'' என்னும் வாழ்வியல் சிந்தனை கட்டுரை நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,இயற்கையின் நண்பன் என்கிற  சுற்று சூழல் சிறு இதழ் அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற மருத்துவ கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக