







அய்யா பிறந்த நாள் கொண்டாடாத கிராமங்களே இல்லை !
அணைத்து கட்சியினரும் பங்கேற்க உணர்ச்சிபூர்வமான பிறந்தநாள் கொண்டாட்டம் !
* 48 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 300 தோழர்கள் அணிவகுப்பு
*60 ஆட்டோக்களில் 130 மகளிரணியினர் பங்கேற்ப்பு *312 இடங்களில் அய்யா படத்திற்கு மாலை * 13 இடங்களில் அய்யா சிலைக்கு மாலை
*50 இடங்களில் கழக கொடியேற்றம் *5 இடங்களில் தகவல் பலகை புதுப்பிப்பு
* மனநல காப்பகம் ,மாற்று திறனாளிகளுக்கு சீருடை ,உணவு,உபகரணங்கள் *பள்ளிகளுக்கு அய்யா படம் என திருப்பத்துரை குலுக்கியது மாவட்டம் முழுதும் இதே நிகழ்வுகள் .
திருப்பத்தூர் கழக மாவட்டம் அறிவாசான் தந்தை பெரியார் 133 வது பிறந்த நாளை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடியது .அய்யா பிறந்த நாள்கொண்டாட்டம் அதிகாலை 5 மணிக்குதிருப்பத்தூரில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு சோலையார் பேட்டை இரயில் நிலையம் அய்யா சிலை அருகே நிறைவுற்றது.
மாவட்ட கழக தோழர்கள் 48 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் 300க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் மாவட்டம் முழுவதும் பயணம் செய்து எல்லா கிராமங்களிலும் மாவட்ட கழகத்தால் அழகுற அமைக்கபட்டிருந்த அய்யா படத்திற்கும், மாவட்ட கழகத்தால் தங்க வண்ண பூச்சு செய்யப்பட்ட மாவட்டம் முழுதும் உள்ள அய்யா சிலைகளுக்கும் மாலை அணிவிக்க பயணம் செய்ய தோழர்கள் அதிகாலை முதலே திருப்பத்தூரில் குழுமினர் .
மகளிரணியினர் தனி அணியாக 60 ஆட்டோக்களில் 130 மேற்பட்டோர் நகர்பகுதியில் சுமார் 90 இடங்களில் மக்கள் பார்வையில் படுமாறு அழகுற அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை இட்டனர். முதல் நிகழ்வாக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் இல்லத்தில் இருந்து அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி
இரு அணியினரும் தந்தை பெரியார் வாழ்க !என்கிற வாழ்த்து முழக்கம் விண்அதிர தோழர்களின் ஒலிமுழக்கத்துடன் பட்டாசு சத்தம் போட்டி இட உற்சாகமாக புறப்பட்டனர் . மாவட்ட முழுவதும் தந்தை படங்கள் தட்டி களில் ஒட்டப்பட்டு மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன .
இந் நிகழ்வை காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் மானமிகு.கணேஷ்மல் தொடங்கிவைத்தார் .இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் தலைமை தாங்கினார்.மண்டல செயலர் பழ.வெங்கடாசலம் ,மாநிலபக துணைத்தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ,கே.கே.சி .கமலாம்மாள், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர் தணிகை .ஜி.கருணாநிதி, மாவட்ட பக தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பக செயலர் பே.இரா.கனகராஜி ,மாவட்ட பக அமைப்பாளர் சித.வீரமணி ,மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி ,மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன் ,மாவட்ட அமைப்பாளர் மா.சி.பாலன் ,மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கமலநாதன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் க.மதியழகன் ,மாவட்ட இளைஞரணிஅமைப்பாளர் வ.ஆறுமுகம் ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,மண்டல மாணவரணி செயலாளர் எ .சிற்றரசன் ,மாணவரணி தலைவர் கு.தமிழ் குடி மகன் ,மாணவரணி செயலாளர் கு.அருண் ,மாவட்ட பக துணைத் தலைவர் இரா .பழனி ,நகர செயலர் எ .டி.ஜி.சித்தார்த்தன் ,நகர தலைவர் து.காளிதாஸ் ,பெரியார் பெருந்தொண்டர் பூங்காவனம் ,புலவர் அண்ணாமலை ,ஜெ.எம்.பி.பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இவ் அணியினர் திருப்பத்தூர் நகரத்தில் பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடிகளை ஏற்றி வேப்பலம் பட்டி ,விஷமங்கலம்,குரும்பேறி ,பேராம்பட்டு உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட திருபத்தூர் ஒன்றிய கிராமங்களில் அணைத்து கட்சியினரையும் அழைத்து அய்யா படத்திற்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடி ஊற்றங்கரை ஒன்றிய பகுதி நோக்கி விரைந்தது .
மகளிரணியினர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,மாநில மகளிர் பாசறை பொருளாளருமான எ.அகிலா அவர்கள் தலைமையில் மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா ,மகளிர் பாசறை அமைப்பாளர் நா.சுப்புலட்சுமி ,மகளிர் பாசறை மாவட்ட செயலர் மு.இந்திராகாந்தி ,மாநில பெரியாரணி பயிற்றுனர் வெ.அழகுமணி ,யசோதா மகேந்திரன் ,மாவட்ட அமைப்பாளர் விஜயா அன்பழகன் இ..வெண்ணிலா ,வித்யா பிரபு ,லட்சுமி அசோகன் சாந்தி தமிழ்ச்செல்வன் ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ஜான்சி ராணி ரவி ,சாந்தி அன்பு , தனலட்சுமி கனகராஜ் ,மு.உண்ணாமலை ,செல்வி வெங்கடாசலம் பிரியா ஜெயரட்சகன் ,சங்கீதா சிவக்குமார் ,சௌந்தரி ராதா கிருஷ்ணன் ,சுதா திராவிடன் ,செல்வராணி சுகுமார் ,மாலா வேலு ,வனிதா கோவிந்தன் ,முருகம்மாள் அப்பாசாமி ,முருகம்மாள் கோவிந்தராஜ் ,சுலோச்சனா மாணிக்கம் ,அம்பிகா ராஜேந்திரன் ,மகாலட்சுமி ,மு.ஈரோடு,மங்கலாதேவி பழனி ,சுஜாதா பெரியாதாசன்,தேவிவேங்கடேசன் ,சுமதிவேங்கடேசன் ,மா,புவனேஸ்வரி உள்ளிட்ட 130 மகளிரணியினர் அய்யா உருவம் பதித்த டிஜிட்டல் பேனர் தாங்கிய கழக கோடி உடன் 60 ஆட்டோக்களில் நகரத்தில் 90 இடங்களில் அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மன நல காப்பகத்திற்கு உணவு மற்றும் சீருடை வழகினர். அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரனகள் வழங்கினர் .சாலையோர பூங்கா திறந்து மரக்கன்றுகள் நட்டனர்
முன்னதாக ஊற்றங்கரை ஒன்றியத்தை வந்தடைந்த மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் தலைமையிலான வாகன அணியினை ஊற்றங்கரை ஒன்றிய எல்லை ஆண்டியூரில் ஆசிர்யர காந்தன் ,கம்யுனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் ஆசிரியர் வரதராசன் ,ஊற்றங்கரை நகர பக பொறுப்பாளர் இரா .பழனி ,கி,ஆ,கோபாலன் ,அண்ணா..அப்பாசாமி சித.அருள்.,இர.அன்பு,மாரம்பட்டி .இரவி உள்ளிட்ட கழக தோழர்கள் மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
மகனூர் பட்டியில் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பொறுப்பாளர் பெரியார் தொண்டர் மானமிகு கு. தண்டபாணி இல்லம் முன்பாக அவரது மாமா சு .வரதராசுலு அக்காள் கு.செய லட்சுமி ஊர் பொதுமக்கள் கழக தோழர்களை அன்புடன் வரவேற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்கள் .பெரி யதள்ளபாடி ,சிங்காரபேட்டை,மிட்டபள்ளி ,பம்பாறு அணை அம்பேத்கார் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து ஊற்றங்கரை நகரை வந்தடைந்தது. ஊற்றங்கரை நகரில் சுமார் 10 அய்யா படத்திற்கு மாலை அணிவிக்க பட்டது .ஊற்றங்கரை நகரின் புகழ் பெற்ற கல்வி நிலையமான வித்யாமந்திர் நிறுவனத்தின் நிர்வாகியும் தாளாளரும் விடுதலை வாசகர் வட்டத்தின் புரவலருமான திரு.வே.சந்திரசேகரன் நிறுவனத்தின் முன்பாக அமைக்கப்பட்ட அய்யா படத்திற்கு தோழர்கள் வாழ்த்தொலி முழங்க மாலையிட்டார் .ஊற்றங்கரை அரசு மேனிலை பள்ளிக்கு அய்யா படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
ஊற்றங்கரை நகரில் மைய பகுதியில் அமைக்க பட்டுள்ள தந்தை பெரியார் சிலை தங்க வர்ண பூச்சுசெயப் பட்டு வண்ண விளக்குகளால் பந்தல் முழுமையும் அழகுற அமைகபட்டிருந்தது.திமுக நகர செயலாளர் பாபுசிவகுமார்,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் திருநாதன் ,விடுதலை வாசகர் வட்ட தலைவர்தணிகை ஜி கருணாநிதி ,இர.திருநாவுகரசு ,ரஜினிசங்கர் ,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் அசோகன் உள்ளிட்ட எராளமான அணைத்து கட்சி பிரமுகர்கள் மாலையிட்டனர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் பற்றாசு சப்தமும் தோழர்களின் வாழ்தொளியும் போட்டியிட கழக கொடியினை ஏற்றி வைத்தார்.பின்னர்அப்பி நாயக்கன்பட்டி, பொம்பட்டி, நொச்சிப்பட்டி, மண்ணாடிபட்டி, கோணப்பட்டி,பெருமாள் நாயகன் பட்டி ,உள்ளிட்ட பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்து கல்லாவி வந்தடைந்தது . மேலும் வீரியம்பட்டி ,படபள்ளி பெரியார் நகர், சாமல்பட்டி ,அனுமந்தீர்த்தம் அழகுதமிழ் ,பத்மா, இல்லம் .கொட்டரபட்டி ,புங்கனை, கொரட்டி, நாய்கனூர்.குமாரம்பட்டி, தோரனம்பதி, கதவனி, காரப்பட்டு , கருமாண்டபதி, ஊமையனூர், உப்பரபட்டி, கெங்கபெரம்பட்டி,கீழ்குப்பம், மூங்கிலேரி. ஆகிய இடங்களில் படங்களுக்கு மாலை அணிவிகபட்டது .
மரு.சுப்பிரமணி ,வேடியப்பன் ,காவேரி, ஒன்றிய தலைவர் மாறன் .இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் வரவேற்க அங்கு அழகுற தங்க வண்ண பூச்சு செய்ய பட்டு ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டு அமைக்கபட்டிருந்த அய்யா சிலைக்கு மாலை அணிவிக்க பட்டது .பின்னர் கல்லாவி மேட்டுதெருவில் மறைந்த மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி அவர்களின் தந்தையார் மறைவுக்கு மாவட்ட கழகம் சார்பில் இறுதி மரியாதை செய்த பின்னர் காட்டுப்பட்டி,சூலகரை, பொடர் ,ஒலைபட்டி, போச்சம்பள்ளி, களர்பதி, சமத்துவபுரம் ,அண்ணாநகர், செட்டியப்பநகர் உள்ளிட்ட எராளமான ஊர்களில் அய்யா படம் திறக்கப் பட்டு கழக கொடி ஏற்றப்பட்டது அதன் பின்னர் மத்தூர் வந்தடைந்தது . மேலும் கதிரம்பட்டி, வீரனகுப்பம், தொட்டம்பட்டி,ஆகிய இடங்களில் படங்களுக்கு மாலை அணிவிகபட்டது .
மத்தூர் நகரில் தங்க வண்ண பூச்சு கொண்டு வண்ண ஒளி விளக்குகளால் அய்யா சிலை அலங்கரிக்க பட்டிருந்தது .வாகன அணியினை வரவேற்ற மத்தூர் ஒன்றிய தலைவரும் ,திமுக பொறுப்பாளருமான பொன்.குணசேகரன் உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் அய்யா சிலைக்கு மாலை அணிவித்தனர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் கழக கொடியை ஏற்றினார் மத்தூர் நகரில் பல இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது கழக கொடி ஏற்றப்பட்டது .பின்னர் கன்னண்டஅள்ளி, தர்மன் தோட்டம் , எகிலேரியன் கொட்டாய், நடுப்பட்டு ,பாண்டவர் குட்டை ,ஆம்பல்லி, கேஜல்நாயக்கன் பட்டி ,கந்திலி, சுந்தரம்பள்ளி , நத்தம்,காகங்கரை, உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் திருப்பத்துரைவந்தடைதது
திருப்பத்தூர் தாலுக்காஅலுவலகம் அருகே இருந்து அய்யா பிறந்த நாள் விழா பேரணி புறப்பட்டது .
வண்ண விளக்குகள் ,மலர்களால் அலகரிக்கப்பட்ட டிராக்டரில் அய்யா படம் அமைக்கப்பட்டு அய்யா பிறந்த நாள் விழா பேரணியை முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் டி. கே.இராஜா அய்யா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிவைத்தார் காமராஜ் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் தலைவர் கணேஷ்மல் ,திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் அண்ணாதுரை,கண்ணதாசன் மதிமுக ,அச்சக உரிமையாளர் சங்க தலைவர் பரந்தாமன் ,வர்த்தகர் சங்க தலைவர் குட்டி ,விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட அணைத்து கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்க பெரியார் பிஞ்சுகள் ,மகளிரணியினர் ,தோழர்கள் என அனைவரின் ஒலி முழக்கங்களுடன் பாண்டுவாத்தியம் முழங்க 1 கிலோ மீட்டர் நீல ஊர்வலம் திருப்பத்தூரில் வலம் வந்தது . ஊர்வலத்தால் திருப்பத்தூர் குழுங்கியது .பொதுமக்கள் அரசியல் கட்சிகளால் கூட முடியாத ஒன்று இவர்களால் எப்படி சாத்தியம் என வியப்படைந்தனர் .ஊர்வலம் பேருந்து நிலையம் வி.பி.சிங் மாளிகை அருகே உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்த பின் சரியாக மாலை 5 மணி அளவில் அனைவருக்கும் மதிய விருந்து பிரியாணி வழங்க பட்டது .
மதிய உணவிற்கு பிறகு சோலையார் பேட்டை ஒன்றியத்திற்கு புறப்பட்ட தோழர்களின் வாகனங்கள் சுமார் 1 1 /2 கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருந்தது .நெருக்கமான இரண்டு கிராமம் என்றால் முதல் வாகனம் ஒரு கிராமத்திலும் கடைசி வாகனம் அடுத்த கிராமத்திலும் இருந்தது .பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புடன் கொண்டாடப் படுவதை கண்டு பொது மக்களும் அணைத்து கட்சியினரும் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர் .சோலையார் பேட்டை ஒன்றியத்தில் அணைத்து பெரியார் இல்லங்களிலும் அய்யா படம் அழகுற அமைக்கப்பட்டு கழக கொடி புதிதாக ஏற்றப்பட்டு வண்ண வண்ண கோலங்களால் வாசல் அலங்கரிகபட்டு வீடு முழுவதும் வண்ண ஒளி(சீரியல்)விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .தாமலேரி முத்தூர், மாநாகம் கடை, கட்டாரி, வி . எம்.வட்டம், அம்மை அப்பன் நகர்,வாலாட்டி யூர், மணி தெரு, அண்ணாதுரை கடை, ஒ. எச் .அலுவலகம், நித்ய மளிகை ,பால்டிப்போ, கே.கே.சி. மாளிகை, கடைதெரு,கமல் கடை, தோக்கியம், சம த்துவ புரம் ,பெரியகரம், பாச்சல், மூகநூர், அச்சமங்கலம், புள்ளநூர், சி. கே. ஆசிரமம் ,சாமுடி வட்டம், ஜே.எம். பெருமாள் இல்லம். நரசிம்மன் இல்லம், கோடியூர், கருப்புக்கொடி இல்லம், தமிழ்செல்வன் இல்லம் ,தங்க அசோகன் இல்லம், இடையாம்பேட்டை,பார்சம்பேட்டை,கோடியூர்,சோலையார் பேட்டை நகரம் உள்ளிட்ட 30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்த பின் சோலையார் பேட்டை ரயில் நிலையம் அருகே வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அய்யா சிலைக்கு மாலை அணிவித்தனர்.இப் பிறந்த நாள் கொண்டடதிற்கு உதவிய அனைவர்க்கும் மாவட்ட தலைவர் கே,சி.எழிலரசன்
ஆடை அணிவித்து பாராட்டி நன்றி சொல்ல விழா இனிதே நிறை வுற்றது. இதை போல ஆம்பூர், வீரகல், சோமலாபுரம், சான்றோற்குப்பம், எ. கஸ்பா, மாங்குளம்,பூ கடை,நாற்றம் பள்ளி ,ஆலங்காயம், ஆண்டி யூர் ,மிட்டூர், உள்ளிட்ட 30 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அய்யா படத்திற்கு மாலை அணிவித்தனர்.
மாவட்ட தலைவர் கே,சி.எழிலரசன் இல்லத்தில் இரவு 9 .30 மணிக்கு மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று கூடி கழக சார்பில் தந்தை பெரியார் பிறந்த விழாவிற்காக மிக சிறப்பான அளவில் ஏற்ப்பாடு செய்து ஆக்கமும் .ஊக்கமும் ,பொருளும் தந்து உதவிய மாவட்ட தலைவர் எழிலரசன் அவர்களுக்கு மண்டல செயலர் பழ. வெங்கடாசலம், பழ. பிரபு, அண்ணா சரவணன், வி. ஜி .இளங்கோ. நன்றி தெரிவித்து உரை ஆற்றி சால்வை அணிவிக்கப் பட்டது . விழாவிற்கான 330 மாலைகளும் மாவட்ட செயலாளர் மானமிகு , வி.ஜி.இளங்கோ,ம.கவிதா ஆகியோர் வழங்கினர். மேலும் ரூ 5000 மாவட்ட கழகத்திற்கு மாநில பக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் வழங்கினார்.