செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கு .தமிழ்குடிமகன் -கே.அன்புநிலா வாழ்விணை ஏற்பு விழா!


கொள்கை பிரச்சாரவிழாவாக நடந்தது

ஊற்றங்கரை ஒன்றியம் சுளகரை கிராமம்   ஆ.குப்பன் -ஜெயலட்சுமி ஆகியோரது மகனும் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி தலைவருமான கு.தமிழ்குடிமகன் செ.கேசவன் ,ஜெயாஆகியோரது மகள் கே .அன்பு நிலா ஆகியோரது  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா ஊற்றங்கரை இந்திரா நகர் சுப்பிரமணிய   திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற் றது. திருப்பத்தூர் மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி  வரவேற்புரையாற்ற வேலூர்  மண்டல செய லாளர் பழ.வெங்கடாசலம்  தலைமையேற்க மாநில பக துணை  தலைவர் அண்ணா .சரவணன் , மாவட்ட tசெயலாளர் வி.ஜி.இளங்கோ  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணமக் களுக்குஉறுதி மொழியை எடுத்துச் சொல்லி மணவிழாவை நடத்தி வைத்த மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் சுய மரியாதை திருமணத் தின் சிறப்புகளையும் தமிழர்கள் இன உணர் வாளர்களாக விளங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.
அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.
சுளகரை கிளை கழக தலைவர் கு.வினோத்குமார்  நன்றி கூறினார்.

மண மக்கள் குடும்பத்தினர் சார்பாக இரு.கிருட்டிணன் ,பொன்முடி ,வண்டி .ஆறுமுகம் ஆகி யோரும் கழக பொறுப் பாளர்கள்  விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி , மாவட்ட துணை செயலாளர் எம் .கே.எஸ்.இளங்கோ ,பக பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ,மாவட்ட பக பொறுப்பாளர் சி.வீரமணி,முன்னால் மாவட்ட  செயலாளர் பழ .பிரபு ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ,மகிளிரணி செயலாளர் கவிதா ஆகியோர்  வாழ்த்து கூறினார்கள்.

நிகழ்ச்சியில்மண்டலமாணவரணி செயலாளர் சிற்றரசு , அண்ணா.அப்பாசாமி,க,துரை,தா.சந்திரசேகரன்,வே.முருகேசன்,இரா.வேங்கடம் .சி,தண்டபாணி,செ.சிவராசு ,கு.அரவிந்தன் ,கு.சுகுமார் ,மு.இராமமூர்த்தி ,இரு.கிருட்டிணன் ,அன்பழகன் பெருமாள் ,பழனி, பொன்.கௌதமன் சி.சாமிநாதன்உள்ளிட்ட கழக பொறுப்பாளாகளும் உறவினர்களம் ஏரா ளமான தோழர்களும் பங்கேற்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக