செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்

ஊற்றங்கரை ஒன்றிய  திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்  7.9.2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் ஊற்றங்கரை நெடுஞ்சாலை துறை பயனியர் மாளிகையில் நடைப்பெற்றது

கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் கே.சி.எழிலரசன்  தலைமை வகித்து உரையாற்றி னார்.

மண்டல  செயலாளர் பழ.வெங்கடாசலம் , முன்னால் மாவட்ட செயலாளர்  பழ.பிரபு,மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா .சரவணன்   ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஊற்றங்கரை  ஒன்றியச் செயலாளர் இர.அன்பு  அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி , ஒன்றிய தலைவர் மா.ரவிச்சந்திரன் ,மாவட்ட பக பொறுப்பாளர் சி.வீரமணி,சி.அருள்  அண்ணா.அப்பாசாமி,க,துரை,தா.சந்
திரசேகரன்,செ.பொன்முடி ,தமிழ்குடிமகன் ,வே.முருகேசன்,இரா.வேங்கடம் .சி,தண்டபாணி,செ.சிவராசு ,கு.அரவிந்தன் ,கு.சுகுமார் ,மு.இராமமூர்த்தி ,இரு.கிருட்டிணன் ,அன்பழகன் பெருமாள் ,பழனி, பொன்.கௌதமன் சி.சாமிநாதன் உள்பட கழக நிர்வாகிகள் கருத் துரை வழங்கினர்.
7.9.2011 நடைபெற்ற மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மா னங்கள் பின்வருமாறு:

1. உலக மனித நேய மாண்பாளர் அறிவுலக பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்றி கிளை கழகம் தோறும் அவரது படங்களுக்கும் அய்யா சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி திராவிடர் இன எழுச்சி தமிழர் மறுமலர்ச்சி நாளாகவும், கொள்கை பிரச்சார பெருவிழாவாக சிறப்பாக கொண்டா டுவது என தீர்மானிக்கப் படுகிறது.

2. தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி செப் 17 அன்று மாவட்ட திராவிடர் கழகத்தின் முடிவின் படி ஊற்றங்கரை ஒன்றியத்தில் சுமார் 30 இடங்களில் அய்யா படம் வைத்து அணைத்து கட்சியினரை அழைத்து மாலை அணிவிப்பது எனவும் 5 நான்கு சக்கர வாகனகளில் மாவட்ட கழகத் தோழர்களுடன் இணைந்து பயணிப்பது எனவும் ,அய்யா சிலை ,கொடிக்கம்பம் ,தகவல் பலகை ஆகியவற்றை புதுபிப்பது எனவும் முடிவு செய்ய படுகிறது

3. தூக்குத் தண்டனை என்பது மனித உரிமைக் கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மேனாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறி வாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து அம் மூவரையும் மனித நேயத்தோடு விடுதலை செய்ய வேண்டுமாய் மத்திய மாநில அரசு களை இக்கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக்கொள் கிறது.

4. ஊற்றங்கரையில் தொடர்ந்து மாதம்தோறும் கலை,இலக்கியம் ,அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தி இயக்கத்தை பல்வேறு தளங்களில் எடுத்து செல்லும் பணியினை மேற்கொண்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை ஒன்றிய திராவிடர் கழகம் பாராட்டுகிறது

5. தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று தமிழ் அறிஞர்கள் மற் றும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் வற்புறுத்தப்பட்டது. இதனை கடந்த தி.மு.க அரசு 2008ஆம் ஆண்டு ஒருமனதாக நிறை வேற்றிய அச்சட்டத்தை தற்பொழுது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு ரத்து செய்து சித்திரை தான் தமிழ்புத்தாண்டு என்று அறிவித்துள் ளதை இவ் ஒன்றிய  திராவிடர் கழகம் கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழக அரசு பரிசீலனை செய்து மீண்டும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்க வேண்டுமாய்  தமிழக முதல்வர் அவர் களை இக்கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக்கொள் கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக