அரங்கம் நிரம்பி வழிந்தது ! கருத்து மழை பொழிந்தது !
ஊற்றங்கரையில் எழுச்சியுடன் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற
பச்சைத்தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா !
இந் நிகழ்ச்சிக்குவிடுதலைவாசகர் வட்டத்தின் துணை தலைவர் சி.சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,விழா அறிமுக உரையை ப.க.மாநில துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்குதருமபுரி காங்கிரெஸ் மாவட்ட பொருளாளரும் ,மூப்பனார் பேரவையின் மாநில துணை தலைவர் கே.எ .அரங்கநாதன் தலைமை தாங்கி கல்வி கடவுள் என்றால் அது காமராசர் தான் எந்த கடவுளும் பொறியாளராகவும்,மருத்துவராகவும் ஆக்கவில்லை காமராசர் தான் அதை செய்தார் பெரியார் சொன்னதை அவர் செய்ததால் தான் காமராசர் புகழை எவராலும் மறைக்க முடியவில்லை .இன்றைக்கு காமராசர் பிறந்த நாளை கொண்டாடும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தை பாராட்டுவதுடன் நன்கொடையாக ரூபாய் 2000 த்தை வாசகர் வட்ட தலைவரிடம் அளித்து விடுதலை பத்திரிக்கையை அனைவரும் படிக்க வேண்டும் என்று அரங்கம் கரவொலியால் அதிரும் வண்ணம் தனது தலைமை உரையையாற்றினார்
திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் ,ஊற்றங்கரை காமராசர் அறக்கட்டளை தலைவர் டி.எஸ் .திருநாதன் திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,மாவட்ட திமுக இலக்கியஅணி செயலாளரும்விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவருமான தணிகை .ஜி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் அரிமா.முத்து .சந்திரசேகர் அவர்கள் அரிமா மற்றும் சமுக பணிகளுக்காக பாராட்டப்பட்டார் .ஊற்றங்கரை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும் ,முன்னாள் ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வ.சாமிநாதன் பாரட்டுரையாற்றினார்
பச்சை தமிழர் காமராசர் பிறந்த நாளையொட்டி காமராசர் படத்தினை திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் Rtn B .கனேஷ்மல் காமராசர் படத்தினை திறந்து வைத்து ஊற்றங்கரை வாசகர் வட்ட செயல்பாடுகளை பாராட்டி ருபாய் 3000 த்தை மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசனிடம் அளித்தார் .மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காமராசர் வாழ்க்கை குறித்த நூலினை வழங்கினார்
திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் .கவிஞர் .கலி.பூங்குன்றன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தந்தை பெரியார் மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும்,இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய .பணிகள் ,இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் நோக்கி உள்ள சவால்கள் குறித்து விளக்கமாக கருத்துரையாற்றினார் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ;திருவளர்கள் மரு.அண்ணாமலை ,பொறி .கௌரிசங்கர் ,மரு.ஜெகன்பாபு,பொன்முடி,வி.ஜி.இளங்கோ ,கே.டி.மணி
ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சாம்பிள் மருந்துகள் வீணடிக்கப்படாமல் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வண்ணம் மருந்து கடைகள் ,மருத்துவர்களிடம் இருந்து சாம்பிள் மருந்துகள் சேகரித்து பெரியார் மணியம்மை இலவச மருத்துவ மனை சென்னைக்கு அனுப்புவதை தொடர் பணியாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் செய்கிறது அதன் ஒரு நிகழ்வாக தருமபுரி பல் மருத்துவர் மரு.அண்ணாமலை அவர்கள் தனக்கு வந்த சாம்பிள் மருந்துகளை கவிஞர்,கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் பொன்முடி நன்றியுரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த மயிலாடன் எழுதிய காமராசர் குறித்த ஒற்றைகலம் செய்தி நகலும் ,தமிழர் தலைவர் எழுதிய வைட்டமின் டி குறித்த வாழ்வியல் சிந்தனை நகலும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் புதிதாக 8 உறுப்பினர்களாக இணைந்தனர்
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சாம்பிள் மருந்துகள் வீணடிக்கப்படாமல் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வண்ணம் மருந்து கடைகள் ,மருத்துவர்களிடம் இருந்து சாம்பிள் மருந்துகள் சேகரித்து பெரியார் மணியம்மை இலவச மருத்துவ மனை சென்னைக்கு அனுப்புவதை தொடர் பணியாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் செய்கிறது அதன் ஒரு நிகழ்வாக தருமபுரி பல் மருத்துவர் மரு.அண்ணாமலை அவர்கள் தனக்கு வந்த சாம்பிள் மருந்துகளை கவிஞர்,கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார் .விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் . ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் பொன்முடி நன்றியுரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் விடுதலையில் வெளிவந்த மயிலாடன் எழுதிய காமராசர் குறித்த ஒற்றைகலம் செய்தி நகலும் ,தமிழர் தலைவர் எழுதிய வைட்டமின் டி குறித்த வாழ்வியல் சிந்தனை நகலும் வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் புதிதாக 8 உறுப்பினர்களாக இணைந்தனர்
விடுதலை வாசகர் வட்ட ஜூன் மாத கருத்தரங்க நிகழ்வுகளின் புகைப்படங்களை http://tirupatturdk.blogspot. com என்னும் வலை பூ தளத்தில் காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக