புதன், 10 ஆகஸ்ட், 2011

தமிழ் இணையப் பயிலரங்கம்

கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.


நாள் :21.08.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,காட்டேரி, ஊற்றங்கரை


புதுச்சேரி முனைவர் .மு .இளங்கோவன், பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.

காலையில் தொடங்கும் விழாவிற்குப் பழ.பிரபு (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்) வரவேற்புரையாற்றுகின்றார்.

வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிறுவுநர் உயர்திரு .வே .சந்திரசேகரன் தலைமையில் விழா நடைபெறுகின்றது.

முன்னிலை : கே.சி.எழிலரசன், பழ.வெங்கடாசலம், தணிகை.ஜி.கருணாநிதி

அறிமுகவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்


நன்றியுரை: அண்ணா.சரவணன்

பங்கேற்கும் பேராளர்களின் கவனத்திற்கு ...

*தமிழ் இணையம் ,தமிழ்த் தட்டச்சு,மின்அஞ்சல்,உரையாடல்,வலைப்பூ உருவாக்கம், பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிப்பீடியா,நூலகம் சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள், தமிழ்க் கல்விக்குரிய தளங்களை அனைவரும் அறிந்து கொள்ளவே ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இப் பயிலரங்கை ஏற்ப்பாடு செய்துள்ளது.

* பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவிற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443910444 /9865817165 /9942166695

பதிவு செய்ய கடைசி நாள் 18 /8 /11

* பயிலரங்கத்தில் பங்கேற்க ஊற்றங்கரை நகரத்தில் இருந்து காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .ஊற்றங்கரைC.A.K .பெற்றோலியம் பேங்க் அருகில் இருந்து காலை 9 மணி அளவில் ஒரு பேருந்தும் 9 .30 மணி அளவில் மற்றொரு பேருந்தும் புறப்படும்.

பயிலரங்கத்தில் பங்கேற்கும் அனைவர்க்கும் மதிய உணவு ,தேநீர் ,குறிப்பேடு ,எழுதுகோல் வழங்கப்படும் .

* பயிலரங்கத்தில் அனைவரும் காலை 9 .30 மணி முதல் மாலை 4 மணி வரை முழுமையாக பங்கு கொள்ள வேண்டும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக