புதன், 21 டிசம்பர், 2011

விடுதலை சந்தா சேர்ப்பில்

          
திருப்பம் தந்த திருப்பத்தூர் !முதல் தவணையாக ரூ 10 இலட்சம் !
                              கழக பொது செயலாளர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் வழங்கப்பட்டது
*தமிழர் தலைவரின் 79 ஆவது பிறந்த நாளையொட்டி 79 விடுதலை ஆயுள் சந்தாக்கள் !
*தமிழர் தலைவரின் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவையொட்டி 500 ஆண்டு சந்தாக்கள் !
திருப்பத்தூர் 21
விடுதலை ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் முத்திரை பதித்த நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி காட்டும் வகையில் 50000 சந்தாக்களை பரிசாக வழங்குவது என பொதுக் குழுவில் எடுத்த முடிவின் படி  திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களை ஒப்படைக்கும் கூட்டம் திசம்பர் திங்கள் 21 ஆம் தேதி புதன் கிழமை மாலை 6 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் நடைப்பெற்றது
                         திராவிடர் கழக பொதுச்செயலாளர்.கவிஞர் .கலி.பூங்குன்றன்  தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி.எழிலரசன் ,வேலூர் மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம் ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி ,மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் ,மாவட்ட செயலாளர் வி.ஜி .இளங்கோ,மாநில மகளிரணி பொருளாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
திருப்பத்தூர் ஒன்றிய கழகம் 
திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் திருப்பத்தூர் நகரின் வணிக பெருமக்கள் ,கழக ஆதரவாளர்கள் ,கிருத்துவ அமைப்பினை சார்ந்த நண்பர்கள் ,ரோட்டரி அமைப்பினை சார்ந்த நண்பர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது .திருப்பத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 49 ஆயுள்  சந்தாக்களும் 123 ஆண்டு சந்தாக்களும் சேகரித்து அதற்க்காக தொகை ரூபாய் 5,௦௦,௦௦௦த்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் ,மாவட்ட இளைஞ்சரணி  துணை செயலாளர் பழனிச்சாமி ,புலவர் அண்ணாமலை ,ஆட்டோ பாண்டியன் ,அன்பழகன் ,இரா கனகராஜ் ,அக்ரி.அரவிந்தன் ,திருப்பத்தூர் நகர தலைவர் காளிதாஸ் கே.கே.சி கமலா அம்மாள் ,மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா,நீலாயதாட்சினி  ஆகியோர் அளித்தனர்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ,அதன் பொறுப்பாளர்கள் அனைவரும் மனமகிழ்ந்து ஆயுள் சந்தா அளித்தனர் .மேலும் ஊற்றங்கரையில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் விடுதலைக்கு சந்தா அளித்தன 
வணிக பெருமக்கள் தமிழ் சங்க உறுப்பினர்கள் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.ஊற்றங்கரை வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயுள் சந்தாவும் ,அதியமான் கல்வி நிறுவனத்தின் சார்பில் 3 ஆயுள் சந்தாவும் சென்னைசங்கர்  IAS அகாடமி சார்பில் 1 ஆயுள் சந்தாவும் பெறப்பட்டது .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவினையும் 106 ஆண்டு சந்தாவினையும் சேகரித்து அதற்க்கான தொகை ரூபாய் 2 ,08 ,600  ய் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி,வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு .அமைப்பாளர் பழ .வெங்கடாசலம்  வழங்கினர்
மத்தூர் ஒன்றிய கழகம்
மத்தூர்
ஒன்றிய கழகம் சார்பில் அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்  ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் விடுதலை சந்தா சேகரிக்கப் பட்டது.மகளிரணி சார்பில் சிறப்பாக சந்தா பெற்றுத் தந்த மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி பாராட்டப்பட்டார்  மத்தூர் ஒன்றிய கழக சார்பில் முதற்கட்டமாக 6ஆயுள் சந்தாவும் ,80 ஆண்டு சந்தா வும் சேகரிக்கப் பட்டு அதற்குரிய தொகையாக ரூபாய் 1 ,80 ,௦௦௦ மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மகளிர் பாசறை பொறுப்பாளர் இந்திரா காந்தி, மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன்,கே.டி.மணி , திருப்பதி ஆகியோர் வழங்கினர்
சோலையார்பேட்டை ஒன்றிய கழகம்
சோலையார் பேட்டை ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக 12 ஆயுள் சந்தாவும் 70 ஆண்டு சந்தாவும் , அரசு ஊழியர்கள்,ஆசிரிய பெருமக்கள்  ,கழக ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினை சார்ந்தவர்களிடமும் சேகரிக்கப்பட்டு அதற்க்கான தொகையாக ரூபாய் 2 ,௦௦,௦௦௦ த்தையும் ஆம்பூர் ஒன்றிய கழகம் சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 1 ஆயுள் 5 ஆண்டு சந்தாவிற்கான  தொகை ரூபாய் 16000 த்தையும்  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே .சி எழிலரசனிடம் மாவட்ட பக தலைவர் சி.தமிழ்ச்செல்வன் ,சோலையார்பேட்டை பெரியார் தாசன் ,தங்க .அசோகன் ,இராசேந்திரன் ,க.மதியழகன் ஆகியோர் வழங்கினர்
,குவிந்த சந்தாக்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தா சேகரிப்பில்  ஈடுபட்டன .அனைத்து ஒன்றியங்களில் இருந்து திரட்டப்பட்ட ஆண்டு ,ஆயுள் சந்தாக்களை பட்டியலிட்டு
முதற்கட்டமாக மொத்தம் 79 ஆயுள் சந்தா 384 ஆண்டு சந்தாவிற்கான முகவரி பட்டியலையும் அதற்க்கான காசோலை ரூபாய் 10 ,௦௦,000 த்தை முதற்கட்டமாக கழக பொதுச் செயலாளர் கவிஞர் .கலி .பூங்குன்றன் அவர்களிடம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .கே.சி எழிலரசன் வழங்கினார் .மேலும் அய்யா நினைவு நாள் அன்று விழா மேடையில் இப்போது அளித்த சந்தாவினையும் சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 79 ஆவது  பிறந்த நாளை குறிக்கும் வகையில் 79 ஆயுள் சந்தாவினையும் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணி நிறைவை குறிப்பிடும் வகையில் 500 ஆண்டு சந்தாவினை அளிப்பதாக உறுதி அளித்தார்

வியாழன், 1 டிசம்பர், 2011

79 அகவை காணும் தமிழர் தலைவர் வாழ்கவே !




இவரன்றோ
தமிழர் தலைவர்
வேறு
எவருண்டு
சொல்வாய்; தமிழா!
பத்து
அகவையிலிருந்தே
இவர்
ஆற்றுகிற
ஒரே பணி
எது சொல்; தமிழா?
தலைவர்
வீரமணி செய்கின்ற பணியெல்லாம்
பெரியார் பணியெனப்
பகைவனும்
சொல்வானே; தமிழா!
ஆசை, ஆசை
அதிகம்
ஒரு  நூறாண்டு
வீரமணி
வாழ வேண்டும்; ஆசை!
பொன்விழா
கண்டவருக்கு
மீண்டுமொரு பவளவிழா
புரிகிறதா தமிழா
உனக்கா புரியாததா...?
அறுபத்து
ஒன்பதாண்டு
பொது வாழ்வில்
ஆசிரியராய்ப்
பணியாற்றும்,
50 ஆண்டு
பணிநிறைவு பவள விழா

ஒரு நினைவூட்டல்
விடுதலையை
நிறுத்திட
எண்ணிய பெரியாருக்கு
நினைவில்
தோன்றியவர் வீரமணி!
இது இவரால் முடியும்
இவரால்
முடியாதது
எவராலும், முடியாது
ஆம்
அய்யா
ஒரு தொலை நோக்காளர், அல்லவா!
தொழிலில்
பிரபலம்
நல்ல வருமானம்
வருகிற காலம்
வீரமணியே வருக விடுதலை
ஆசிரியராக
பொறுப்பேற்க வருவீர்
வழங்குகிறேன்; ஊதியம்
ஊதியம்
வாங்கியா
விடுதலையில்
ஊழியம் செய்வது?
தலைவருக்குக்
குழப்பம்
அம்மா
மோகனாவோடு
ஒரு கலந்தாய்வு
இன்றுவரை
ஊதியம்
பெறாத, ஊழியன்
50
ஆண்டு
ஆசிரியர் பணி
அண்ணாவுக்கு
அழுத்தமா....?
அவசரமா.....?
அண்ணா நீண்ட
காலம்
வாழ்ந்திருந்தால்
கூறியிருப்பார்
தமிழருக்கு
இதயக்கனி; வீரமணியென்றே!
வீரமணியின்
விடுதலை ஆசிரியர் பணி
கின்னஸிலும்
இடம் பெறலாம்
பத்திலிருந்து
பகுத்தறிவைப்
பரப்புகிற
அறிவி, விருந்து
நோயாளித்
தமிழனுக்கு
உயிர் காக்கும், மாமருந்து
ஆகவே தமிழர்
தலைவரின்
பிறந்தநாள் சூளுரை
தோழா நீ
ஏற்கவேண்டும் ஏற்புரை
50 ஆயிரத்துக்குப் பதிலாக
79
ஆயிரம் சந்தாக்கள்
வழங்கினால் உனக்குச்
சரித்திரம், வழங்கிடும்; பாராட்டுரை!
நாட்கள்
குறைவு மிகக்குறைவு
தமிழா
நீ
கடைசி நேரக் கதாநாயகன்
புறப்படு
தமிழா புறப்படு
இப்போதே
இன்றே நீ புறப்படு
வீடுதோறும்
சென்று வா...!
வீதியெங்கும்
விடுதலைக்குச் சந்தா கேள்
உற்றார் உறவினர்
நண்பர்கள்
யாரையும், விட்டுவிடாதே!
திருமணமா...?
காதுகுத்தா....?
கருமாதியா...?
கணக்கைத் திற!
விடுதலைக்கு
மொய் பெய்து
சந்தாக்களைக் குவித்திடு
தமிழா
நீ
செயல்படும் வேகத்தால்
அக்ரகார ஆட்சிக்கு
ஏற்படும், மூக்கறுப்பு!
இனி
பகைவர்
குலை நடுங்கும்
தமிழா
உன்
மூச்சே, விடுதலை
இருட்டுத்
தமிழனின்
இல்லத்தில்
விடுதலை, விளங்கட்டும்.
முயன்றுபார், தமிழா
நீ முறையாக
முயற்சித்தால்
ஒரு இலட்சத்தைத்
தாண்டும், விடுதலை சந்தா!
நீ
இருக்காதே இனி சும்மா
தொண்டறம் மாறாத
தலைவருக்குப்
பிறந்தநாள் காணிக்கை
இதுதான்; தமிழா!
புறப்படு, தமிழா!
புறப்படு...!